தாம்பத்ய உறவின்போது பெண்கள் என்ன நினைப்பார்கள்? – சுவாரஸ்யத் தகவல்கள்

Posted on August 1, 2012 by vidhai2virutcham
தாம்பத்ய உறவின் போது கணவன், மனைவி இருவரின் உடலும் உள்ளமும் ஒரே லயத்தில் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் அள வில்லாத இன்பத்தை இருவருமே அடையமுடியும். ஆனால் தாம்பத் ய உறவின் போது பெண்கள் என்ன நினைப்பார்கள்? அவர்களின் மன தில் என்ன மாதிரியான எண்ணங் கள் ஓடிக்கொண்டிருக்கும் என்ப து  பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
கணவனுடன் காதலில் திளைத்திருக்கும் போதுகூட நாளைக்கு என் ன சமைக்கலாம் என்பது பற்றி பல பெண்கள் நினைத்துக்கொண் டிருப்பார்களாம்.
இவரு எப்ப முடிக்கிறது. நான் எப்ப தூங்குறது? காலையில சீக்கிரம் எழுந்திருக்கணுமே என்பது பெரும்பாலான பெண்களின் கவலை யாக இருக்கிறது. இந்த நேரத்தில குழந்தை கண் முழிச்சிட்டா என்ன பண்றது என்பது 20 சதவிகித பெண்களின் கவ லையாம்.
கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வ து, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த பெண்களில் 51 சதவிகிதம் பேர் கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும் புவோம் என்று கூறியிருக்கிறார்கள்.
38 சதவீத பெண்கள் கவர்ச்சி யான உடை அணிந்துகொண் டு கணவ ரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்த மானவை என்று கூறியிருக் கிறார்கள். கணவரோடு தனி மையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசி விட்டு, உறவி னைத் தொடர்வோம் என்று மிகக்குறைந்த அள விலான பெண்களே தெரிவித்துள்ளனர்.
செக்ஸ் முடிந்த பின்னர் என்ன நினைப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்தமுறை எப்போ கூடு வோம் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாக 37 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். செக்ஸ் முடிந்த உடன் உடல் முழுவதும் நெகிழ்ச்சி யாகி, வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வே லைகளை வேகமாக பார்க்கிறேன் என் று 19 சதவீதம்பேர் கூறியிருக்கிறார்கள். நீண்டநாட்கள் இருந்த உடல் வலி, தலைவலி போயே போச்சு என்று 21 சதவிகிதம் பேர் கூறியுள்ள னராம். இருவருக்கும் இடையே ஒருவித திருப் தியையும், நம்பிக்கை யையும் தாம்பத்ய உறவு ஏற்படு த்தியிருக்கிறது என்று 9 சதவீதம்பேரு ம் தெரிவித்திருக்கிறார்கள்.
பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப் தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறே ன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து ள்ளனர்.
நன்றி – இளமை