ரஞ்சிதாவைத் தொடர்ந்து நித்யானந்தா சீடரான நடிகை கவுசல்யா

ரஞ்சிதாவைத் தொடர்ந்து நித்யானந்தா சீடரான நடிகை கவுசல்யா
பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. 1990-களில் முன்னணி நாயகியாக இருந்தார். கடைசியாக திருமலை, சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களில் சிறு வேடங்களில் வந்தார். தற்போது டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார். கவுசல்யாவுக்கு சமீபத்தில் முதுகு வலி ஏற்பட்டது. இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகவில்லை.

நித்யானந்தா ஆசிரமத்தில் ஹீலிங் தெரபி சிகிச்சை பெற்றால் வலி குணமாகிவிடும் என தோழிகள் ஆலோசனை கூறினர். இதையடுத்து நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று வலிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஹீலீங் தெரபி மூலம் நித்யானந்தா பல நோய்களை குணமாக்குவதாக அவரது சீடர்கள் தெரிவிக்கின்றனர். இது போல் பல்வேறு பிரச்சினைகளுடன் வந்து குணமானவர்கள் நித்யானந்தாவின் சீடராக மாறி உள்ளனர்.

தியானம், யோகா கற்று ஆசிரமத்திலேயே தங்கி விடுகிறார்கள். நடிகை ரஞ்சிதாவும் மன அமைதி தேடி ஆசிரமத்துக்கு சென்றார். பின்னர் நித்யானந்தா சீடராக மாறினார். கவுசல்யாவும் அவரைப் போல் நித்யானந்தாவின் பக்தையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.